WELCOME TO OUR WEBSITE

தேவனுடைய கிருபையினால் தேவன் எங்களுக்கு உதவினார் என்ற இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஏழை மக்கள், மாற்றுதிறனாளிகள், வயது முதிர்ந்தோர், ஆதரவற்ற குழந்தைகள், படிக்க வசதியில்லாத குழந்தைகள், தெரு ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்கள் இவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டதே இந்த அறக்கட்டளை. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். தேவன் கிருபை செய்வார். இந்த அறக்கட்டளையானது ஒரு மனிதனுக்கு சொந்தமானதோ, தனி நபருக்கு சொந்தமானதோ இல்லை. இதில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றும் இதில் சேரும் உறுப்பினர்களும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நடத்த உள்ளோம். இந்த அறக்கட்டளையின் தலைப்பே தேவன் எங்களுக்கு உதவினார் என்பது தான். நாம் உதவவில்லை. அவர்களுக்கு உதவுவது தேவனே. இந்த அறக்கட்டளையை நேர்மையுடனும், கடவுளுடைய பார்வையில் உண்மையும், உத்தமுமாய் நடத்த உள்ளோம். இதில் உறுப்பினராக சேர இளம் வாலிபர்கள் மற்றும் சகோதரிகளை அன்புடன் அழைக்கிறோம். நாம் சேர்ந்து ஏழை மக்களின் வாழ்க்கைக்கு உதவுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒன்றுபடுவோம், நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்வோம். மீண்டும் ஒருமுறை அன்புடன் எங்களோடு இணைந்து செயல்பட அழைக்கிறோம்.

அன்பானவர்களே தேவனுடைய கிருபையினால் GOD HELPED US (GHU) CHARITABLE TRUST-ன் பெயரில் வங்கி கணக்கு 12.01.2012 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் இதன் நிறுவனர், செயலாளர், பொருளாளர் ஆகியோர்களின் பெயரில் Bank Account  தொடங்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் மூன்று ஊரை சார்ந்தவர்கள். மூன்று நபர்களும் ஒருவருக்கு ஒருவர் சொந்தக்காரரோ, உறவினரோ அல்ல. ஆனால் இந்த அறக்கட்டளையின் மூலம் ஒன்றாய் இணைந்திருக்கிறோம். இந்த அறக்கட்டளையின் மூலம் நாங்கள் சகோதரர்கள். இதில் உண்மையாகவும், உத்தமமாகவும் நடத்த இருக்கிறோம் எங்களுக்காக தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் ஏழை மக்கள் மற்றும் அநேக நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்ய விரும்பினால் எங்களுடைய வங்கி கணக்கு எண், வங்கியின் கிளை, வங்கியின் பெயர் எல்லாம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறக்கட்டளையின் பெயரில் PAN CARD-ம் 12.01.2012 கிடைக்கப்பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் மனதில்  ஏழை மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இந்த அறக்கட்டளையின் மூலம் செய்யலாம். இந்த அறக்கட்டளை ஒரு தனிநபருக்கோ அல்லது தனி நிறுவனத்துக்கோ சொநதமல்ல. இதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது தான் இந்த அறக்கட்டளை எதையும் மனுஷனுக்கு என்று செய்யாமல் தேவனுக்கு என்று செய்வோம். 

 

                                                                   அன்புடன்

GOD HELPED US (GHU)
CHARITABLE TRUST